• Welcome to TamilsGuide
செய்திகள் 1

100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் கெஹலிய மனுத்தாக்கல்

இலங்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குற்ற விசாரணைப் பிரிவிடம் நூறு மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்றைத்  தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தனவினால் கெஹலியவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இம் மனுவில் ”சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக”  கெஹலிய  சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் காவிந்த பியசேகர மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தரம் குறைந்த மருந்து பொருள் இறக்குமதி தொடர்பில் குற்றம் சுமத்தி சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply