• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  நாட்டிலிருந்து தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்தற்கான விரிவான வேலைத்திட்டத்தை தாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். அந்தவகையில்  தொழுநோயை  கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட வைத்திய குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இக் குழுவானது  தொழுநோயை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான வரைப்படத்தை உருவாக்க சுகாதார அதிகாரிகளுக்கு உதவும்” இவ்வாறு வைத்தியர் பிரசான் ரணவீர தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply