• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்

இலங்கை

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் நீர் விநியோகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைத்  தவிர்ப்பதற்காக களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக அணை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நீரை விரயமாக்காது சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர்  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply