• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் தமது திணைக்களத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்கிழமை) அடையாள பணிப்பகிஷ்கரிப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர்

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர் ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டமை தொடர்பில் அதனை கண்டிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்டதாகவும் அதில் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கும் குறித்த ஆசிரியர் சேவை சங்க உறுப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து குறித்த ஆசிரியர் சேவை சங்க உறுப்பினர் திணைக்களத்தின் மேலதிகாரியை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்துள்ளது

மேலும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் குறித்த விடயம் தொடர்பிலான மஹஜர் ஒன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களச் செயலாளரிடம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply