யாழில் உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு
இலங்கை
யாழ், நாவாந்துறை பகுதியில் இயங்கிவந்த உணவகமொன்றில் பழுதடைந்த உணவை விற்பனை செய்த குற்றச் சாட்டில், உணவக உரிமையாளருக்கு 72,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது குற்றத்தை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்தே, கடுமையான எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் ,அவருக்கு 72,000 ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.