• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சுண்ணாம்புசூளை வீதியின் திருத்தப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்களின் விருப்பத்துக்கு மாறாக மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திககாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 115 மில்லியன் நிதியில் 22.5 மில்லியன் ரூபா நிதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்டது.

அத்துடன் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 17 இலட்சம் ரூபாவினை சுண்ணாம்புசூளை வீதியின் திருத்த பணிக்கு ஒதுக்குவதற்கு, கிராம மக்கள் பொது அமைப்புக்கள் இணைத்து கலந்துரையாடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்நிலையில் மக்களால் தீர்மாணம் நிறைவேற்றப்பட்ட பின்னர் குறித்த நிதி வேறு தேவைக்காக பயன்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையிலேயே இன்று காலை மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply