• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இம்யூனோகுளோபுலின் விவகாரம் - உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு

இலங்கை

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply