• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

இலங்கை

கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர்  மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச்  சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான  கதிரவேல் பத்மராஜ்  எனத் தெரிய வந்துள்ளது.  இவர் காணமற்போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply