• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய 6 பேர் கைது

இலங்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப்  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் தங்கம் மற்றும் சொத்துக்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகப்படும் இடமொன்றில் 3 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழியொன்றைத் தோண்டிக்கொண்டிருந்த போதே  குறித்த 6 பேரும் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி,மதவாச்சி,பதவியா,தெய்நதர, ஹக்மான ஆகிய  பகுதிகளைச்  சேர்தவர்கள் எனவும்,  அவர்களை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply