• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படுக்கையறை சமாச்சாரம் குறித்து கூச்சமின்றி கூறிய மாயா

சினிமா

மதுரையில் பிறந்த மாயா எஸ் கிருஷ்ணன் ஆரம்பத்தில் ஒரு மாடல் அழகியாகவும், பாடகியாகவும் திகழ்ந்தவர். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வானவில் வாழ்க்கை என்ற படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் 2023 விஜய் டிவியில் பிரம்மாண்ட முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்ற இவர் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

பொறியியல் பட்டதாரியான இவர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தேசிய அளவில் ஆறாவது இடத்தை பிடித்தவர் என்பது பலருக்கும் தெரியாது.

அதுமட்டுமல்லாமல் 2016 இல் வெளிவந்த தொடரி திரைப்படத்தில் நிருபராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம்,2.0, மகளிர் மட்டும், சர்வம் சுந்தரம் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

பிக் பாஸ் சீசன் இல் போட்டியாளராக கலந்து கொண்ட இவரைப் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவு வெளி வந்தது அனைவருக்குமே நன்றாக தெரியும்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்து அசத்தியிருப்பார். இந்த கேரக்டர் ரோல் ஆனது ரசிகர்களின் மத்தியில் இவரை பெரும் அளவு லைக் செய்ய வைத்தது.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக மாறிய மாயா ஓரினச் சேர்க்கையாளர் என்று பல்வேறு வகைகளில் பல விஷயங்கள் பரவியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அந்த வகையில் நடிகையும் மாடல் அழகியமான அனன்யா ராம் பிரசாத் என்பவரை இவர் பாலியல் ரீதியாக சீண்டு இருக்கிறார் என்ற பேட்டி கடுமையான அதிர்வலைகளை அனைவரிடமும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது காசு கொடுத்தா அதை பண்ணுறேன் என்று படுக்கை அறை சமாச்சாரம் குறித்து கூச்சமின்றி பேசிய மாயாவின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள்.

இதற்குக் காரணம் பிரபல நடிகையாக இருக்கும் மாயா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது விக்ரம் படத்தில் படுக்கையறை காட்சி ஒன்று முனகுவது போன்று நடித்திருப்பார். அந்த காட்சியை மீண்டும் எங்களுக்கு நடித்துக் காட்டுங்கள் என்று தொகுப்பாளினி ஒருவர் அவரிடம் விரும்பி கேட்டு இருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த மாயா அந்த முனகல் சத்தம் ரொம்ப காஸ்ட்லியானது. நான் உங்களுக்கு பில் அனுப்புகிறேன், அதை நீங்கள் செட்டில் செய்து விட்டால் உங்களுக்கான அந்த முனகல் சத்தத்தை மீண்டும் எழுப்ப தயார் என கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பேச்சாளர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் மாயா இப்படி பேசி இருக்கிறாரா? என இணைய தள வாசிகள் அனைவரும் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே தன்னை பற்றி பல்வேறு விதமான நெகடிவ் விமர்சனங்களை பெற்றிருக்கக் கூடிய இவர் பணத்துக்காக எதையும் செய்வார் போல என்பது போல ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 
 

Leave a Reply