• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமனற்ற நீதி நூல் வெளியீடு 

இலங்கை

திரு. ராஜ் ராஜரட்ணம் அவர்களின் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "சமனற்ற நீதி" நூல் கடந்த சனிக்கிழமை மருத்துவ பீட கூவர் கலையரங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

மதத் தலைவர்கள் மற்றும் பல பிரமுகர்களின் பங்கு பற்றுதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பமானது.

பேராசிரியர் கண்ணதாசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமான நிகழ்வில் அருட்தந்தை யோசுவா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

வைத்திய நிபுணர் குருபரன் அவர்கள் திரு. ராஜ் ராஜரட்ணம் அவர்கள் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார்.

திருமதி. கோசலை மதன், எழுத்தாளர் நிலாந்தன், கலாநிதி குருபரன், செல்வி நிவேதனா ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினார்கள்.

வெளியீடு செய்யப்பட்ட நூலின் முதல் பிரதியை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுக் கொண்டார்.

திரு. ராஜ் ராஜரட்ணம் அவர்கள் சிறப்பான ஏற்புரையை வழங்கினர். பலரின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கியமை சிறப்பம்சமாகும்.

மொழிபெயர்ப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டார் கள்.

Leave a Reply