• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது பவதாரிணி உடல்

சினிமா

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று காலமானார். கல்லீரல் புற்றுநோய் பாதிப்பினால் இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பவதாரிணி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

பவதாரிணி மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சமூக வலைதளத்தில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகி பவதாரிணி உடல் இலங்கை, கொழும்புவில் இருந்து சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர். விமான நிலைய விதிமுறைகள் முடிந்தவுடன் அவரது உறவினர்களிடம் பவதாரிணி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை, தியாகராயநகரில் உள்ள இளையராஜா வீட்டில் பவதாரிணி உடல் பொது மக்கள் மற்றும் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply