• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று அவரது இல்லத்தில்

இலங்கை

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று (26) புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

பொது அஞ்சலிக்காக நேற்று பிற்பகல் பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை; இறுதிச் சடங்குகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மலர்சாலைக்கு நேற்று (25) இரவு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்கள் உட்பட பல தரப்பினரும் வருகை தந்திருந்தனர்.

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் பயணித்த கண்டெய்னர் மற்றும் வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


 

Leave a Reply