• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாத்தறை – பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை சம்பவம்- இருவர் கைது

இலங்கை

மாத்தறை – பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி – வங்ச்சாவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலியைச் சேர்ந்த 25 மற்றும் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply