• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சென்னைக்கு கொண்டு செல்லப்படும் பவதாரிணியின் பூதவுடல்

இலங்கை

இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் நேற்று பிற்பகல் கொழும்பு, தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், அவரது பூதவுடல் இன்று சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது

புற்றுநோய் காரணமாக அவருக்கு கடந்த 5 மாதங்களாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், கொழும்பு, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்றுப் பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கொழும்பில் இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சிக்காக இலங்கையில் தங்கியிருந்த இசைஞானி இளையராஜா, நேற்றுப் பிற்பகல் தனியார் வைத்தியசாலைக்கு விரைந்து, உயிரிழந்த அவரது மகளின் உடலை பார்வையிட்டார்.

1976 ஆம் ஆண்டு ஜுலை 23 ஆம் திகதி சென்னையில் பிறந்த இவர், 1995 ஆம் ஆண்டு வெளியான ராசையா திரைப்படத்தின் ஊடாக இளையராஜாவினால் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு வெளியான பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல எனும் பாடலுக்காக தேசிய விருதையும் பவதாரணி பெற்றார்.

இவர், இளையராஜாவின் இசையில் மட்டுமன்றி, யுவன் சங்கர் ராஜா, ஹரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பல பாடல்களை பாடினார்.

மேலும்,இசையமைப்பாளராகவும் சினிமாத்துறையில் கால் பதித்த பவதாரணி, அமிர்தம், இலக்கணம், மாயநதி போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வந்தநிலையிலேயே, 47 ஆவது வயதில் இவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரதேச பரிசோதனைகளுக்குப் பின்னர் இன்று முற்பகல் 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply