• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்லை தாண்டிய மீன்பிடி - இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை

எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களுக்கும், எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று படகுகளில் வந்த 13 இந்திய மீனவர்கள் நேற்றையதினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று நீரியல் வளத் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தியபோது, எதிர்வரும் 21ஆம் திகதிவரை 13 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
 

Leave a Reply