• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய அளவில் அதிகமான முறை தேசிய விருது பெற்ற திரைப்பாடலாசிரியர் நம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான்.

சினிமா

"முதல் மரியாதை" முதல் தேசிய விருதையும் "ரோஜா" இரண்டாவது தேசியவிருதையும் "கருத்தம்மா" மூன்றாவது தேசிய விருதையும் "சங்கமம்"  நான்காவது தேசிய விருதையும் 
"கன்னத்தில் முத்தமிட்டால்" ஐந்தாவது தேசிய விருதையும் "தென்மேற்கு பருவக்காற்று" ஆறாவது தேசிய விருதையும் "தர்மதுரை" ஏழாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
1992 ஆம் ஆண்டு புதுமுக இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் அவர்களின் இசையமைப்பில் ரோஜா படத்திற்காகப் பாடல்களை எழுதினார். அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. சின்ன ஆசை பாடல் தேசிய விருது பெற்றது. ஏ.ஆர் ரகுமான் அவர்களும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

நாம் எல்லோருக்கும் சின்ன சின்ன ஆசைகள் சிறுவயதிலிருந்தே இருக்கும். பொருட்கள்மீது, பயணங்கள் மீது, பணியின் மீது இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இங்கே ஒரு பெண்ணிற்கு இயற்கையின் மீது சின்ன சின்ன ஆசைகள் இருக்கிறது. அது என்னென்ன ஆசைகள் என்பதே பாடலாக விரிகிறது.
சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை
"வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை" விண்ணைத்தொட்ட கற்பனையின் உச்சம் என்று மலையாள இலக்கிய உலகில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் எம்.டி வாசுதேவன் நாயர் பாராட்டி உள்ளார்.
மேகங்களை எல்லாம் தொடவேண்டும் 
சோகங்களை எல்லாம் விடவேண்டும்
சோகங்களை விட்டுவிட்டால் மனிதர்கள் எவ்வளவு நிம்மதியோடும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறான் புத்தன். பரவாயில்லை ஆசைகொள்வோம் துன்பத்தை எல்லாம் விட.
"மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை"
வானவில்லை யாருக்குத்தான் பிடிக்காது‌. அதை ஆடையாக உடுத்த ஒருவள் ஆசைப்படுகிறாள். மேகத்தைத்தான் ஆடையாக உவமைப்படுத்தி பார்த்திருப்பீர்கள் ஆனால் கவிஞர் வானவில்லை ஆடையாக உவமைப்படுத்தி கற்பனை வளம் சேர்க்கிறார்.
"சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை"
இப்பாடல் வரிகளைப் படித்தாலே விளக்கம் விளங்கிவிடும். ஆதலால் தான் அதிகமாக விளக்கவுரை எழுதவில்லை. 
உங்களின் சின்ன சின்ன ஆசையைக் கூறுங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply