• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

இலங்கை

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத்  தடை விதிக்கக்  கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ”நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்து குறித்த  மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 

Leave a Reply