• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சொந்தமில்லை பந்தமில்லை 

சினிமா

இசைஞானி அறிமுகமான அன்னகிளியில் சுசீலாமா பாடிய சொந்தமில்லை பந்தமில்லை பாடல் தியேட்டரில் 2ஆம் நாள் நீக்கப்பட்டது. ரெக்கார்டில் கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள் படத்தில் பாடல் நீக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம் செய்ய மீண்டும் படத்தில் இந்த பாடல் சேர்க்கப்பட்டது.
இசைஞானி மெல்லிசை மன்னருடன் வாத்திய கலைஞராக முதன் முதலில் பணியாற்றிய அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் வரும் "மலர் எது என் கண்கள்" பாடலை பாடியவர்.
இசைஞானி இசை அமைத்த முதல் தெலுங்கு படமான பத்ரகாளியில் “சின்ன சின்ன கன்னையா”, “அடிகாவே அக்கடா”, “மஹிஷாசுருதனு” என 3 பாடல்களை பாடியவர்.
இசைஞானி கன்னடத்தில் இசை அமைத்த முதல் படமான “மாத்து தப்பாத மகா”வில் மரியாத ஹரிஷடா பாடலை பாடினார்.
முதன் முதலில் இசைஞானி பாடிய ஜோடிப்பாடலான தென்ன மரத்தில தென்றல் அடிக்குது பாடலை இவருடன் இணைந்து பாடியது குறிப்பிடதக்கது.
இசைஞானியின் இசையில் P.சுசிலா அம்மா பாடிய பாடல்களின் கலெக்சன் அன்றைய கால கட்டங்களில் TDK 60 கேசட்டுகளில் அதிகம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு பதியப்பட்ட பாடல்களின் தொகுப்பு...
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை
2, என் கண்மணி உன் காதலன்
3. ராசாத்தி மனசுல இந்த ராசாவின்
4. தென் மதுரை வைகை நதி தினம்
5. பூ பூக்கும் மாசம் தை மாசம்
6. முத்து மணி மாலை எனை தொட்டு
1. ராசாவே உன்னை காணாத
2. காலைத்தென்றல் பாடி வரும்
3. வரம் தந்த சாமிக்கு பதமான
4. உன் நெஞ்ச தொட்டு சொல்லு என்
5. கற்பூர பொம்மை ஒன்று கை
6. பூங்காவியம் பேசும் ஓவியம்

சுசிலா அம்மாவின் திரை இசை பயணம் 65 வருடங்களை சிறப்பிக்கும் விதமாக 2019ல் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இசைஞானி கலந்து கொண்டு வைர மோதிரத்தை பரிசளித்து இசையரசி சுசீலா அம்மாவிற்கு தன் மரியாதையையும் அன்பையும் செலுத்தினார். அந்த மேடையில் ஆசையில பாத்தி கட்டி பாடலின் வரிகளை இசைஞானியை பார்த்து "நானா பாடலியே நீ தான் பாட வெச்சே" என்று பாடியது பேரழகு...

Kannan Natarajan

Leave a Reply