• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினி பாணியை தவிர்க்க சொன்ன கமல்.. 

சினிமா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தேசிங்கு பெரியசாமி, "சிம்பு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் நான் காட்டு பசியில் இருக்கிறேன் என்று அதற்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு நடிகர் கமல்ஹாசன், சிம்புவின் ஒட்டு மொத்த திறமையையும் வெளிக்கொண்டுவரும் ஒரு படமாக இது இருக்கும் என்று சொன்னார்.

இப்படம் தர லோக்கல் வரலாற்று படமாக இருக்கும். இப்படத்தின் கதையை பொறுத்தவரை நிறைய கதாபாத்திரங்களுக்கான தேவை இருக்கிறது. மார்க்கெட்டுக்காக தெலுங்கில் இருந்துலாம் நடிகர்களை கொண்டு வரும் ஐடியா வேண்டாம். கதைக்கு பொருத்தமானவர்களை மட்டும் தேர்வு செய்யுமாறு கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கூறிவிட்டார்கள்" என்று பேசினார்.

இதற்கு ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்பட பாணியை தவிர்க்க சொன்னதாக கமல் கூறியுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

Leave a Reply