• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். நிலவும் மோசமான காலநிலை - சென்னை திரும்பிய விமானம்

இலங்கை

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பியுள்ளது.

குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply