இந்திய மீனவர்களுக்கு புத்தாடை வழங்கிவைப்பு
இலங்கை
தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு, இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.