யாழ். மாநகர சபை மீது மக்கள் அதிருப்தி
இலங்கை
யாழில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் கஸ்தூரியார் வீதியிலும், ஸ்ரான்லி வீதியிலும் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை காத்திரமான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.