• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கை

கொலை உள்ளிட்ட குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய  யாழைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளார்.

யாழ் அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த கடந்த வெள்ளி இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து படகொன்றின் மூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ள நிலையில் அங்குள்ள தமிழக கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அந்நபர், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் அங்கு வாழ முடியாது என்பதால் படகொன்றில் தமிழகம் வந்துள்ளதாகவும், அதற்காக படகோட்டிக்கு 2 இலட்ச ரூபாய் பணம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், குறித்த நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகவும், சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றிலும் வேறு சில குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தகவல் தமிழக பொலிஸாருக்கு , இலங்கை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் தற்போது புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply