• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை

இலங்கை

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுபவர்களும் கொடுப்பனவை பெறுவதற்கு ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னர் VAT அறிமுகப்படுத்தப்பட்டதால் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

VAT வரி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply