• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவில் போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

இலங்கை

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அவசியம் என தெரிவித்து ஐநா பொதுச்செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலிய கொடூரமான தாக்குதல், மருத்துவமனைகளில் கண்மூடித்தனமான தாக்குதல் என்பன சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே சர்வதேச சட்டங்களை அனைத்து நாடுகளும் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 159 பேரின் கையொப்பத்துடன் ஐநா பொதுச்செயலாளருக்கு குறித்த கடிதம் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply