• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காட்டு யானையின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

இலங்கை

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று இன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், வீதியில் செல்வோரை அச்சுறுத்தி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த யானையை மீண்டும் காட்டுக்குள் துறத்தும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முயன்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் அண்மைக்காலங்களில் யானை – மனித மோதலால் யானைகளும் மனித உயிர்களும் இழக்கப்படுகின்ற  சந்தர்ப்பங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply