• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமற் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடு

இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீடை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும்1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், , யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு வழங்க்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply