நீருக்கடியில் அனகோண்டாவுடன் கட்டிப்புரளும் வாலிபர்
நாள்தோறும் இணையத்தில் புதுப்புது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி கொண்டே இருக்கும். அதில் விலங்குகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பயனர்களை பெரிதும் கவரும். அந்த வகையில் நீருக்கடியில் பெரிய அனகோண்டாவை வாலிபர் ஒருவர் கட்டிப்புரளும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பச்சை நிற பெரிய அனகோண்டா ஒன்றை வாலிபர் தனது கழுத்தில் வைத்துள்ளார். பின்னர் அந்த அனகோண்டாவுடன் நீருக்கடியில் மூழ்குவதும், அதனுடன் கட்டிப்புரள்வது போன்ற காட்சிகள் பயனர்களை வியக்க வைக்கிறது. சுமார் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.