• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிச்சரம் நூல் வெளியீடும் பாவலர் விருது  வழங்கும் நிகழ்வும்

கனடா

கனடா தமிழ்க் கவிஞர் கழகம் நடத்திய 'கவிச்சரம்' நூல் வெளியீடும் 'பாவலர்' விருது  வழங்கும் நிகழ்வும் சிறப்புற இடம்பெற்றது

க்டந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கனடா தமிழ்க் கவிஞர் கழகம் நடத்திய 'கவிச்சரம்' நூல் வெளியீடும் 'பாவலர்' விருது  வழங்கும் நிகழ்வும்  மண்டபம் நிறைந்த வகையில்  நேர்த்தியான முறையில் நகர்ந்து சென்று சிறப்புற இடம்பெற்றது.
விழாத் தலைவர்  கந்த ஶ்ரீபஞ்சநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த விழா சிறப்புற நடைபெற செயலாளர் பவானி தர்மகுலசிங்கம் மற்றும் பொருளாளர் க. குமரகுரு ஆகியோர் உட்பட நிர்வாக சபையினர் அனைவரும் ஒத்துழைத்து இறுதிவரை அக்கறையுடன் செயற்பட்டனர்.

இவ்வருடத்திற்குரிய 'பாவலர்' விருது பெற்ற பின்வரும் 
ஐந்து கவிஞர்கள் பெருமைக்குரிய வகையில் கௌரவிக்கப்பெற்றனர்.
கவிஞர்கள் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். சந்திரன் வேலாயுதபிள்ளை. மதிபாஸ்கரன் கணபதிப்பிள்ளை. சரவாம்பிகை வாசுதேவன். சுகந்தி மார்க்கண்டு ஆகியோரே விருதுகள் பெற்றவர்களாவார்கள்
பேராசிரியர் இ. பாலசுந்தரன். 'உதயன்; லோகேந்திரலிங்கம். மற்றும் எழுத்தாளர் அகில் சாம்பசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாவலர்கள் அகணி சுரேஸ வரவேற்புரையையும் மாவிலி மைந்தன் சண்முகராஜா சிறப்புரையும் 'கவிச்சரம்' நூல் வெளியீட்டு உரையை பாவலர் க. குமரகுருவும் வழங்கினார்கள்
 

Leave a Reply