• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகக்கிண்ணத்தில் தோல்வியடைந்தமைக்காக வருந்துகின்றேன்

இலங்கை

”உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமைக்காக வருந்துகிறேன்” என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொண்ட இலங்கை அணி இன்று (10) அதிகாலை நாடு திரும்பிய போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும், துரதிஷ்டவசமாக போட்டிகளில் தோல்வியடைந்து விட்டோம். இதற்காக மிகவும் வருந்துகின்றேன்.

எம்மால் சிறப்பாக நிறைவு செய்ய முடியவில்லை. அதைத் தவிர, எனக்கு சொல்ல எதுவும் இல்லை. எமது ஆரம்பம் சிறப்பாக இருந்தது, ஒரு அணியாக எங்களால் முடிந்ததைச் செய்தோம். போட்டியில் தோல்வியடையும் போது,  என்ன செய்ய முடியும் “அணியில் ஒற்றுமை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன்.

அனைவரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தோம். எனக்கு அணியில் இருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. போட்டிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது  கடினம். எனினும்  இனிவரும் தொடர்களைப்  பார்த்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும் ” இவ்வாறு குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply