• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் சீரற்ற காலநிலையால் 28 பேர் பாதிப்பு

இலங்கை

யாழில்  கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் 07 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதுடன், 07 குடும்பங்களைச்  சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி கிழக்கு பகுதியிலேயே இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை ,இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்றைய தினம் வரையிலான காலப்பகுதியில் 836.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நேற்றைய தினம் மாத்திரம் 8.11 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது” இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

Leave a Reply