• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் அறிவிப்பு

இலங்கை

வடக்கு மாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாண நதி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக, எமது பாரம்பரியத்திற்கு ஏற்ப தண்ணீர் பிரச்சனையை கையாள்வது குறித்து தாம் ஆலோசித்து வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

மேலும், தற்போதுள்ள 40,000 ஏரிகளை மேம்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு, கடலில் கலக்கும் நதி நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply