• Welcome to TamilsGuide
செய்திகள் 1

JVP ஆட்சியமைத்தால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும்

இலங்கை

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரமே உண்டு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணில் ராஜபக்ஸ தரப்பினர் தொடர்ந்தும் நாட்டை அதாள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளனர்;, இதனால் நாடு தொடர்ந்தும் பிண்ணடைவயே சந்திக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டு மக்கள் முறையான தலைவர்களை தெரிவு செய்யாவிட்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். தற்போதைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணியை தவிர வேற கட்சிகளுக்கு அத்தகைய தகுதி இல்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply