• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மோசமான வானிலை - கேரளாவிற்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்

இலங்கை

கொழும்பில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இலங்கை நோக்கி வரவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மாலை 5.20 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டது, ஆனால் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது.

மேலும், மாலைதீவில் இருந்து மாலை 5.30 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த UL-116 விமானமும் கேரளாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கா மற்றும் மத்தளவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இரண்டு விமானங்களும் கேரளாவிற்கு திருப்பி விடப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Reply