• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் முதல் உரையை ஆற்றிய அக்ஷதா மூர்த்தி

என்னுடைய கணவர் தான் என்னுடைய சிறந்த நண்பன் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆண்டு கூட்டத்தொடர் மாநாடு மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.
  
இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி, முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சி மேடையில் தனது உரையை ஆற்றினார்.

கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டின் மேடையில் முதல் முறையாக பேசிய ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி என்னுடைய கணவர் தான் என்னுடைய சிறந்த நண்பன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரிஷியும், தானும் 24 வயதில் கல்லூரியில் படிக்கும் போது பழகத் தொடங்கினோம், அப்போதே பிரித்தானியா மீது அதிக பற்றுடன் ரிஷி சுனக் பேசியதை மேடையில் அக்ஷதா மூர்த்தி நினைவு கூர்ந்தார்.

இதையடுத்து தனது உரையை முடித்துவிட்டு அக்ஷதா மூர்த்தி மேடையை விட்டு கீழே இறங்க திரும்பிய போது, மேடையேறிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தியை கட்டிணைத்து பாராட்டினார். 

Leave a Reply