• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்

இலங்கை

முல்லைதீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இன்று (செவ்வாய்கிழமை) திருகோணமலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் சட்ட ஆட்சியை நிலை நிறுத்து! நீதித்துறையில் தலையிடாதே! நீதித் துறையை சுயமாக இயங்கவிடு, போன்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

Leave a Reply