• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம் - விசாரணைக்குழு நியமனம்

இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுக்கள் இன்று குறித்த முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக நேற்று ஆரம்பித்த காலவரையறையற்ற தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பரஞ்சோதி தெரிவித்திருந்தார்.
 

Leave a Reply