• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுவர் தினத்தில் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கை

சர்வதேச சிறுவர் தினமான நேற்றுக்  கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது  யாழ் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

இதன் போது ”யுத்த காலத்தின்போது  நூற்றுக் கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் படையினரிடம் கையளிக்கப்பட்டும்  உள்ள எமது சிறுவர்களை எம்மிடமே ஒப்படைப்பதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது பிள்ளைகளைக் காணவில்லை என கடந்த பத்து வருடத்திற்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரையில் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனியும் தாமதிக்காது சர்வதேசம் காத்திரமான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
 

Leave a Reply