ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள் நூல் வெளியீட்டுவிழா
இலங்கை
சட்டத்தரணி எ.பி.கணபதிப்பிள்ளை எழுதிய ‘ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்‘ என்ற நூல் வெளியீட்டு விழா ஹட்டனில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
மலையக மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் இந்த நூல் ஆங்கில மொழியில் Climpses of a Tea Bud என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் டியு குணசேகர மற்றும் தற்போதய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.