• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிபெட்கோ, லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை உயர்த்தின

இலங்கை

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரித்திருப்பதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

சிபெட்கோ எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரித்திருப்பதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply