• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்,காரைநகரில் கஞ்சாவுடன் சிக்கியவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம், காரைநகர் கடற் பகுதியில் 125 கிலோகிராம்  கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபருடன் இருந்த மேலும் சிலர் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply