• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டம்

இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் (11.10.2023) ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

முறையற்ற வரிக்கொள்கை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அமைச்சருக்கு எதிர்வரும் (11.10.2023) ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு நேற்றைய தினம் (27.09.2023) கூடியபோது, இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply