• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பதுளையில் 9 குடும்பங்கள் வசித்துவந்த லயன் குடியிருப்பில் தீ விபத்து

இலங்கை

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்றிரவு பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட இத்தீபத்தினால் 6 வீடுகள் முற்றாகவும், 3 வீடுகள் பகுதியளவிலும் தீக்கிரையாகியுள்ளன.

9 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர்   குறித்த குடியிருப்பில் வசித்து வந்துள்ள நிலையில், அவர்களில் 33 பேர் மாப்பாக்கலை ஞானவாஹினி தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தீவிபத்தினால் உடமைகள் பல   தீக்கிரையாகியுள்ள போதிலும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும்  தீயை மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில்  தீயணைப்புப் படையினர்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவிபத்து குறித்த  மேலதிக விசாரணைகளைப்  பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply