• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

இலங்கை

தியாக தீபம்  திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வானது  இன்று காலை 8.30 மணியளவில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது தீபச்  சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply