• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக அதிகரித்துவரும் முறைப்பாடுகள்

இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடம் 5000 இக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296 முறைப்பாடுகளும், கடுமையான காயங்கள் தொடர்பாக 163 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 242 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

மேலும், சிறுவர்கள் பிச்சை எடுப்பது தொடர்பாக இதுவரை 196 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுதொடர்பான முறைப்பாடுகள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இணையவெளியில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுமிகள் தொடர்பில் 76 முறைப்பாடுகளும், சிறுவர்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply