• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணிக்கக்கற்களை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் விமான நிலையத்தில் கைது

இலங்கை

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த பெண் ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்கவிலிருந்து இந்தியாவின் சென்னை நோக்கி நேற்று இவர் பயணிக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக்கற்களின் எடை 2 கிலோ 311 கிராம் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களின் சந்தை பெறுமதி 29.1 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுங்க அதிகாரிகளின் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply