• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் மஞ்சத் திருவிழா

இலங்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.

முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி, தெய்வானை ஆகியோர் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.

இந்தக் காட்சியினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

Leave a Reply