• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூரிய ஒளி தான் குழந்தைக்கு உணவு - ரஷ்ய நபரின் அதிர்ச்சி செயல்

சூரிய ஒளியை மட்டுமே கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல சமூக ஊடக influencer-க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான காரணமாக அமைந்துள்ளார்.
  
Maxim Lyutyi தீவிரமான விசித்திரமான நம்பிக்கைகளைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. குழந்தைக்கு சரியான உணவு கொடுப்பதற்கு பதிலாக சூரிய ஒளியில் வைப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

Maxim Lyutyi கற்பனை கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவதன் மூலம் அவனுக்கு மனிதர்களால் இயலாத சக்திகளை வழங்க முடியும் என்று நம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த நம்பிக்கை கொடிய விளைவாக அமைந்தது. சரியான உணவு கொடுக்கப்படாத குழந்தை நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு சோச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தது.

இந்நிலையில் பிறந்த குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Lyutyi முன்னதாக தனது மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டதாகவும், தனது செயல்களுக்கு ஆன்லைனில் நியாயம் கற்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் "பிராணா" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கடுமையான வீகன் (சைவ) உணவு முறையை கடைபிடித்ததாகவும் அவர் கூறப்படுகிறது. இது சுவாச உணவு முறை (Breatharianism) என்றும் அழைக்கப்படுகிறது.

இது மனிதர்கள் சூரிய ஒளியில் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற ஆபத்தான மற்றும் நிரூபிக்கப்படாத கோட்பாடு ஆகும்.

இந்த வழக்கு தவறான தகவல்களின் ஆபத்துகள் மற்றும் சில ஆன்லைன் நபர்களின் செல்வாக்கு பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளது. 
 

Leave a Reply