• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் - சஜித் பிரேமதாச 

இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய பகல் உணவுத் திட்டம் இல்லாதொழிக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அரசாங்கம் உணவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்க ஆட்சியின் கீழ் அனைத்து மாணவ மாணவியருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply